#2296

#2296. அவத்தைகளுக்கு உரிய குணங்கள்

சாத்திகம் எய்தும் நனவெனச் சாற்றுங்கால்
வாய்ந்த இராசதம் மன்னும் கனவென்ப
ஓய்த்திடும் தாமதம் உற்ற சுழுத்தியாம்
மாய்த்திடும் நிற்குணம் மாசில் துரியமே.

நனவு நிலையில் உயிரிடம் பொருந்துவது சாத்துவிக குணம்.
கனவு நிலையில் உயிரிடம் பொருந்துவது இராசத குணம்.
சுழுத்தி நிலையில் உயிரிடம் பொருந்துவது தாமச குணம்.
ஐம்பொறிகள், அந்தக்கரணங்கள் செயற்படாமல் இருக்கும் நிலையே துரியம் என்னும் பேருறக்கம்.